​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா கும்பலின் வெறிக்கு தாலியை பறிகொடுத்த பெண் கண்ணீர் விட்டு கதறிய சோகம்..!

Published : Mar 09, 2024 9:10 AM



கஞ்சா கும்பலின் வெறிக்கு தாலியை பறிகொடுத்த பெண் கண்ணீர் விட்டு கதறிய சோகம்..!

Mar 09, 2024 9:10 AM

சென்னை புளியந்தோப்பில் வீட்டருகே கஞ்சா போதையில் சண்டையிட்டவர்களை தட்டிக்கேட்டவரை கஞ்சாகுடிக்கி இளைஞர்கள் வஞ்சம் வைத்து கொலை செய்ததால் ஆதரவின்றி தவிப்பதாக மனைவி வேதனை தெரிவித்துள்ளார்

கஞ்சா குடிக்கிகளால் தனது கணவர் கொலை செய்யப்பட்டதாக கண்ணீரில் நிற்கதியாய் தவிக்கும் ஷோபா இவர் தான்..!

சென்னை புளியந்தோப்பு குமாரசாமி ராஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்
இவரது மனைவி சோபா. கடந்த 3 தேதி இரவு சக்திவேல் புளியந்தோப்பு டிமலஸ்ரோடு பகுதியில் தேநீர் அருந்துவதற்காக வந்துள்ளார். டீக்கடையில் நண்பர்களோடு பேசி கொண்டிருக்கும் போதே அங்கு வந்த 4 பேர் திடீரென கத்தியால் சக்திவேலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அவரது மனைவி சோபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.. உடனே அங்கு ஓடிவந்த சோபா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கணவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு மருத்துவர்கள் சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சோபா இது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி நவீன்குமார் என்கிற சுண்டு, மட்ட அஜீத், சிலம்பரசன், விக்கி என்கிற தேள்விக்கி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த வாரம் ரவுடிகள் 4 பேரும் சேர்ந்து சக்திவேல் வீட்டருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாகவும், அப்போது சக்திவேல் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரவுடி கும்பல் 3 ஆம் தேதி டீ குடிக்க வந்த சக்திவேலை கஞ்சா போதையில் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ரவுடிகள் 4 பேர் மீதும் பல்வேறு காவல் நிலையத்திங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது

போலீஸார் 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் வியாழக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.. இதனை தொடர்ந்து பேசின் பிரிட்ஜ் போலீஸார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.

வீட்டருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால், அப்பாவியான தனது கணவரை, ரவுடி கும்பல் வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்த ஷோபா, என் தாலியே கஞ்சா கும்பலால் பறிக்கப்பட்ட கடைசியாக இருக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்

கணவரையும் கொன்று விட்டனர், தனக்கு குழந்தைகளும் கிடையாது யாருடைய ஆதரவும் இல்லாமல் நாளைக்கு தனக்கு என்ன நடக்குமோ ? என்ற அச்சத்தில் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்தார்